Published : 04 Jul 2023 10:57 AM
Last Updated : 04 Jul 2023 10:57 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்வு

மும்பை: பங்குசந்தையில் காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 62.17 புள்ளிகள் உயர்வடைந்து 65267.22 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 280.68 புள்ளிகள் உயர்வடைந்து 65,485 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.90 புள்ளிகள் உயர்ந்து 19,396 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது ஏற்ற இறக்கம் கண்டது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 62.17 புள்ளிகள் உயர்வடைந்து 65267.22 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.20 புள்ளிகள் உயர்ந்து 19326.75 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், தடையில்லாத வெளிநாட்டு நிதி வரவுகளுக்கு மத்தியில் இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவடைந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம் கம்பெனி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்டஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, என்டிபிசி, கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி, பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x