Published : 03 Jul 2023 06:45 PM
Last Updated : 03 Jul 2023 06:45 PM

வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 65,000, நிஃப்டி 19,000+

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் முதல்முறையாக திங்கள்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 486 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயர்வடைந்து 65,205 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 133 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயர்ந்து 19,322 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 282.85 புள்ளிகள் உயர்வடைந்து 65,001 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 81.30 புள்ளிகள் உயர்ந்து 19,078 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், நிலையான வெளிநாட்டு நிதி வரவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது நாளாக புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 486 புள்ளிகள் உயர்வடைந்து 65,205.05 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 133.50 புள்ளிகள் உயர்ந்து 19,322.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, இன்ட்ஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்வில் இருந்தன.

பவர்கிரிடு கார்ப்பரேஷன், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, டிசிஎஸ், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎஸ் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க், இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x