Published : 28 Jun 2023 07:22 PM
Last Updated : 28 Jun 2023 07:22 PM

புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை: சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 499 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயர்வடைந்து 63,915 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி154 புள்ளிகள் (0.82 சதவீதம்) உயர்ந்து 18,972 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் அதன் புதிய உச்சத்துடன் தொடங்கியது. காலை 10:31 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 266.36 புள்ளிகள் உயர்வடைந்து 63,682.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.90 புள்ளிகள் உயர்ந்து 18,888.30 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், எஃப்ஐஐ கொள்முதல், கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன.

புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் தொடங்கிய நிலையில், வர்த்தக நேரத்தின் போது இதுவரை இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 64,050.44 ஆகவும், நிஃப்டி 19,011.25 ஆக புதிய உச்சம் அடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 499.39 புள்ளிகள் உயர்வடைந்து 63,915.42 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 154.70 புள்ளிகள் உயர்ந்து 18,972.10 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி, இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா பேங்க், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x