Published : 27 Jun 2023 06:18 PM
Last Updated : 27 Jun 2023 06:18 PM

சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 446 புள்ளிகள் (0.71 சதவீதம்) உயர்வடைந்து 63,416 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 126 புள்ளிகள் (0.68 சதவீதம்) உயர்ந்து 18,817 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.90 புள்ளிகள் உயர்வடைந்து 63,100.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.15 புள்ளிகள் உயர்ந்து 18,735.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்களுக்கு மத்தியிலும் நிதி மற்றும் வங்கிப் பங்குகளின் எழுச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன.

ஹெச்டிஎப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி ஆகிய இரண்டின் இணைப்பு வரும் ஜூலை 1ம் தேதி அமலுக்கு வரும் என்று அதன் தலைவர் தீபக் பரேக் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதன் பங்குகள் ஏற்றம் பெற்று இன்றைய லாபத்திற்கு வழிவகுத்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 446.03 புள்ளிகள் சரிவடைந்து 63,416.03 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 126.20 புள்ளிகள் உயர்ந்து 18,817.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்டிஎஃப்சி, ,ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், பவர்கிரிடு கார்ப்ரேஷன், விப்ரோ, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எம் அண்ட் எம், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன. மாருதி சுசூகி, ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x