Published : 20 Jun 2023 06:43 PM
Last Updated : 20 Jun 2023 06:43 PM

சென்செக்ஸ் 159 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 159 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்வடைந்து 63,327 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61 புள்ளிகள் (0.33 சதவீதம்) உயர்ந்து 18,816 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கம் இன்றி தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது சரிவை நோக்கிச் சென்றது. காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 350.36 புள்ளிகள் சரிவடைந்து 62,817.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 59.90 புள்ளிகள் சரிந்து 18,695.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய குழப்பமான சூழல்களுக்கு மத்தியில், இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகத்தின் பெரும் பகுதி நிலையில்லாமல் எதிர்மறையாகவே பயணித்தது. இருந்தபோதிலும் தகவல்தொழில்நுட்பம் , டெக், மின்சாரம் மற்றும் யுட்டிலிட்டி பங்குகளின் கடைசி நேர விற்பனைக் காரணமாக தொடக்க நேர வீழ்ச்சிகளில் இருந்து மீண்ட பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 159.40 புள்ளிகள் உயர்வடைந்து 63,327.70 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.20 புள்ளிகள் உயர்ந்து 18,816.70 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா பேங்க், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, நெல்ட்லே இந்தியா, விப்ரோ, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, டைட்டன் கம்பெனி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x