Published : 20 Jun 2023 11:03 AM
Last Updated : 20 Jun 2023 11:03 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியது.

காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 350.36 புள்ளிகள் சரிவடைந்து 62,817.94 ஆக இருந்தது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிவடைந்து 63,118 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 18,742 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கம் இன்றி தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது சரிவை நோக்கிச் சென்றது.காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 350.36 புள்ளிகள் சரிவடைந்து 62,817.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 59.90 புள்ளிகள் சரிந்து 18,695.55 ஆக இருந்தது.

உலகளவில் நிலவிய குழப்பமான சூழல், சீனா அதன் வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்வில் இருந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x