Published : 15 Jun 2023 10:50 AM
Last Updated : 15 Jun 2023 10:50 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) வீழ்ச்சியுடனே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 99 புள்ளிகள் சரிவடைந்து 63,129 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 18,738 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது மெல்ல உயரத் தொடங்கியது. காலை 10:01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 10.25 புள்ளிகள் உயர்வடைந்து 63,238.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20.50 புள்ளிகள் சரிந்து 18,776.40 ஆக இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய விகிதத்தை மாற்றாமல் அப்படியே தொடர்வது என்ற அறிவிப்பு உலகளாவிய சந்தைகளில் கலப்பு சூழலை உருவாக்கியது. இதற்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, நெஸ்டலே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எம் அண்ட் எம், ஐடிசி, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன. இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, டிசிஎஸ், விப்ரோ, கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x