Published : 14 Jun 2023 06:44 PM
Last Updated : 14 Jun 2023 06:44 PM

சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்வடைந்து 63,228 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 39 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயந்து 18,755 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் குறைவான ஏற்றத்துடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவைச் சந்தித்தது. காலை 10:02 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.43 புள்ளிகள் சரிவடைந்து 63,052.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.60 புள்ளிகள் சரிந்து 18,707.55 ஆக இருந்தது.

எப்எம்சிஜி மற்றும் உலோக பங்குகளின் விற்பனை காரணமாக இன்றைய தொடக்க நிலை சரிவுகளை மீட்டெடுத்த இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் லாபத்தில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 85.35 புள்ளிகள் உயர்வடைந்து 63,228.51 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 39.70 புள்ளிகள் உயர்ந்து 18,755.90 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சுசூகி, எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வடைந்து இருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி, ஐடிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x