Last Updated : 15 Jun, 2024 09:13 AM

 

Published : 15 Jun 2024 09:13 AM
Last Updated : 15 Jun 2024 09:13 AM

ப்ரீமியம்
நூல் நயம்: கைமாறி வந்த கதைகள்

அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வந்த பூர்விகக் குடிகளான செவ்விந்தியர்கள், அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் தங்கள் பெருமளவு நிலத்தை இழந்தனர். இன்று மிகக் குறுகிய நிலப்பரப்பில் அரசின் நிதியுதவியுடன் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், அவர்களது சமூகத்தில் நெடுங்காலமாக நிலவிய கதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. டிரிஸ்ட்ரம் பி. காஃபின் என்கிற அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் பதிவுசெய்த அம்மாதிரியான கதைகளின் தொகுப்பு இது. வானதி என்கிற புனைபெயரில் எழுதிவரும் முத்துபிரகாஷ் இவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

செவ்விந்தியர்களிடையே அவர்கள் வசிக்கும் பகுதி சார்ந்து ஹோப்பி, டஹ்லடன், சாஸ்தா, வைண்டாட், ஷையன் உள்படப் பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு பிரிவினரின் பண்பாடு வெளிப்படுகின்றது. இயற்கையுடன் செவ்விந்தியர்களுக்கு இருந்த உறவு, நன்மை தீமை குறித்த அவர்களது புரிதல், வாழ்க்கையை எந்த முன்முடிவுகளும் இன்றிச் செவ்விந்தியர்கள் அணுகிய பாங்கு போன்றவை இக்கதைகளின்வழியே புலப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x