Published : 01 Nov 2020 07:35 PM
Last Updated : 01 Nov 2020 07:35 PM

விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 2 முதல் - 8 ம் தேதி வரை) 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -

முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.

குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைகள் மாறும். பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவார்கள். சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகி வருமானம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதேசமயம் பணியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குறிப்பாக அயல்நாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

விவசாயப் பொருட்கள் தொடர்பான ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே நடக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் பேசித் தீர்க்கப்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

புதன்-
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து, மற்றவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும்.

வீண் விவாதங்கள், உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வியாழன்-
வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய நாள். செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு தெரியாது. கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி-
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விவாதங்களைச் செய்ய வேண்டாம்.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

ஞாயிறு-
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*************************

அனுஷம் -

பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். மீண்டும் குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்து விஷயங்களில் பிடிவாதமாக இருக்க வேண்டாம். பணவரவும் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும்.
அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வேலையில் அழுத்தங்களும் கூடும். உயரதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வார்கள். பொறுமையோடு இருந்தால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

ஒரு சிலர் வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சி சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

தொழிலில் தேங்கி நின்ற பொருட்களெல்லாம் விறுவிறுப்பாக விற்றுத் தீரும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக இருக்கும். அதில் ஒரு சில சலுகைகளும் கிடைக்கும்.

பெண்களுக்கு சிறப்பான நன்மைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அனைத்தும் தீரும். அதேசமயம் புதிய நபர்களின் நட்பு ஏற்படும். அந்த நட்புகளை தவிர்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் ஒப்பந்தங்களை ஏற்கும் முன் முழுமையாக மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன்-
வரவும் செலவும் சமமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலக வேலையில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி-
செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும்போது கவனமாக இருங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

ஞாயிறு-
நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*******************

கேட்டை -

எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு சில விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குறிப்பாக சொத்து தொடர்பான விஷயங்களில் சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.

வழக்குகள் ஏதும் இருந்தால் முடிந்தவரை தள்ளி வைக்க வேண்டும். புதிய நபர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டாம். அப்படிப்பட்ட நட்புகளை தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார இடத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் தொடர்பாக எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றத்தை தருவதாக இருக்கும்.

புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் பொழுது ஒரு முறைக்கு இரு முறை முழுமையாகப் படித்து பார்த்து ஒப்பந்தங்களை ஏற்கவேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை அதிக அக்கறை காட்ட வேண்டும்.

பெண்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். கலைத் துறை சார்ந்தவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பணிச்சுமை அதிகரிக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகளை இன்று முழு மூச்சாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வு தோன்றுவதால் அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். நீண்டநாள் நண்பரின் உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
மனம் மகிழும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சி மன நிறைவைத் தரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தாமாக தேடி வரும் அரசு சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.



வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக அல்லது வியாபாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி-
வாழ்க்கைத் துணையிடம் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாள் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவரின் தொடர்பு ஏற்படும்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள்.சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடனும், நண்பர்களுடனும் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வாருங்கள். நன்மைகள் நடக்கும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x