Published : 04 May 2020 11:27 AM
Last Updated : 04 May 2020 11:27 AM

மகம், பூரம், உத்திரம் ; (மே 4 முதல் 10 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகம் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
எதிர்ப்புகள் காட்டி வந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இனி பற்றாக்குறை என்பதே இருக்காது.
உறவினர்கள் நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும். எதிர்ப்பு காட்டி வந்த சக ஊழியர்கள் உங்களுடன் சமாதானமாகச் செல்வார்கள்.
தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபம் ஏற்படும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் விஷயங்கள் முடிவாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சி ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம்
திங்கள் -

நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். பதட்டத்தை குறைத்துக்கொள்ளுங்கள். செலவுகள் அதிகமாக ஏற்படும். சிக்கனமாக இருக்கவேண்டும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். தடை பட்ட காரியங்கள் அனைத்தும் சுலபமாக முடிவடையும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் விலகும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும்.

புதன்-
வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்றி தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த உதவி இன்று கிடைக்கும். தூரத்து உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அருகிலிருந்த சிறிய அச்சுறுத்தல்களும் இப்பொழுது விலகும்.

வியாழன்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை பேசி முடிப்பீர்கள் வியாபாரத்தில் வருமானம் பெருகும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சலுகைகளும் எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

வெள்ளி-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வகையில் திருமணம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்த ஏற்றம் உண்டாகும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனாலும் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டாம். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு இன்று திருமணம் சம்பந்தமான விஷயங்கள் முடிவாகும்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். பணி தொடர்பான சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தார் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.

ஞாயிறு-
புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரத்தை தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும் அந்த முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை நம்புங்கள். அதற்குத் தேவையான உதவிகள் அனைத்தும் நண்பர்களே கிடைக்கும் தந்தை, தந்தை வழி உறவு கொள்ளும் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்குங்கள். ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************************************


பூரம் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். சொத்துக்கள் பிரச்சினையில் சுமூகமாக தீர்வு கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது அல்லது பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை தொடர்வதற்கான வங்கிக் கடன் கிடைக்கும்.
வேலையில் இருந்த ஒருசில சர்ச்சைகள் விலகி, சாதகமாக மாறும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
ஒருசிலருக்கு முதலீடுகளுக்கான தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அல்லது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பங்குவர்த்தகத்தில் அளவான லாபம் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும்.
கணவர் வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். அவர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
மனைவி அல்லது மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகப் பணிகளில் மன நிறைவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும்.

செவ்வாய்-
வேண்டிய உதவிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். குழப்ப நிலைகள் மாறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.

புதன்-
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் ஒரு சில நிர்ப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி தள்ளிப்போகும். வியாபாரத்தில் கொடுக்கல்வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன்-
ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகை வரும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

வெள்ளி-
நிதானமாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் கவனமாகப் பழகுங்கள். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் இன்று கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். வியாபார விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு-
எதிர்பாராத பண வரவு ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். பெண்களுக்கு சகோதர வழியிலிருந்து ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் தொடரும். மனக் குழப்பங்கள் தீரும்.
*****************************************


உத்திரம் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். சொத்து தொடர்பான விஷயங்கள் ஏதும் இருந்தால் பேசி தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் இருமடங்காக ஏற்படும்.
பெண்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்பொழுது உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சி இருக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாளாக பேசிவந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் போடும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள்-
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே மனவருத்தங்கள் அகலும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு அளவான முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய்-
தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். அலட்சியமாக எதையும் கையாள வேண்டாம்.


புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். இளைய சகோதரரால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
செலவுகள் ஏற்பட்டாலும் மன நிறைவு உண்டாகும். கஷ்டத்தில் இருக்கும் உறவினருக்கு உதவி செய்ய முற்படுவீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க முன் வருவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை தொடரும்.

வெள்ளி-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். உங்களைப் பற்றி அவதூறுகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.


சனி-
பொறுமையாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் நீங்களாக சிக்கிக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருக்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். தேவையற்ற கற்பனைகளை செய்ய வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களை மனதில் நிறுத்துங்கள். நண்பர்களிடம் இருந்து சாதகமான நல்ல தகவல் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஆறுமுக கடவுளை வணங்குங்கள். சண்முகக் கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகம் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x