Published : 28 Aug 2017 01:34 PM
Last Updated : 28 Aug 2017 01:34 PM

இலங்கை ரசிகர்கள் ரகளைக்கு நடுவே மைதானத்தில் உறங்கிய தோனி: வைரலாகும் புகைப்படம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டிக்கு இடையே இலங்கை ரசிகர்கள் ரகளை செய்தபோது மைதானத்தில் தோனி தூங்கினார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய - இலங்கைக்கு இடையே நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா 124 ரன்களும், தோனி 67 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

இந்திய அணியின் வெற்றியை தாண்டி இந்த ஆட்டத்தில் பல சுவரசியமான நிகழ்வுகள் நடந்தன அவைதான் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.

45-வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி பெரும் சூழல் உருவாகியுள்ளதை அறிந்த இலங்கை ரசிகர்கள் பலரும் மைதானத்தில் தங்களிடமிருந்த பாட்டில்களை தூக்கி ஏறிந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மைதானத்துக்குள் கலவரத் தடுப்பு போலீஸார் வரவழைக்கப்பட்டு ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

இதனால் இந்தியாவின் வெற்றி 35 நிமிடங்கள் தள்ளி போனது.

இலங்கை அணிவீரர்கள் பலரும் கவலை படிந்த முகத்துடம் மைதானத்தில் குழுமியிருந்தனர். அப்போது களத்தில் இருந்த இந்திய அணியின் வீரர் தோனி மைதானத்தில் படுத்து சில நிமிடம் கண்மூடி ஓய்வு எடுத்தார். இதனை வர்ணையாளர்களும் கிண்டலடித்தனர்.

தற்போது தோனி உறங்கிய இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"தோனி இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் ரசிகர்களின் மன நிலையை பிரதிபலிக்கிறார்", "The captain cool is trying to make Sri Lanka cool", கண்ணா நீ தூங்கடா...”என்று பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். #dhoni என்ற ஹேஷ்டேக் கீழ் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி மூலம் இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x