Last Updated : 30 Sep, 2013 11:38 AM

 

Published : 30 Sep 2013 11:38 AM
Last Updated : 30 Sep 2013 11:38 AM

அறிவோம் நம் மொழியை - வலசை என்றால் என்ன?

விலங்குகளும் பறவைகளும் உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் இடம்பெயர்வதற்கு வலசை என்று பெயர்.





இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான் 'வலசை' என்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாக 'வலசை' ஆகிவிட்டது.

மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்க 'புலம்பெயர்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். 'வலசை' என்ற சொல்லுக்கு 'குக்கிராமம்' என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 'வலசையூர்' என்று ஒரு கிராமம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x