ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ரமன் மகசேச விருது, ஊழல் செய்த அதிகாரிகளின் செயலை வெளிச்சம் போட்டு காட்டிய பணிக்காக சீன பத்திரிக்கையாளருக்கும், அதே நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வழக்கறிஞருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அதே நாட்டைச் சேர்ந்த வாங் காங்ஃபா என்பவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. அவர் தூய்மைக் கேடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டபூர்வமான உதவி செய்யும் அமைப்பை நடத்திவருகிறார். இந்த அமைப்பு, பொதுமக்களுக்கு இலவசமான சட்ட ஆலோசனைகளும், சுற்றுச்சூழல் சட்டம் சம்பந்தமாக வழக்கறிஞர்களுக்கு பயிற்சியும் அளித்து வந்தனர்.
இது மட்டுமின்றி, இந்தோனேசியாவைச் சேர்ந்த மானுடவியலாளர் சௌர் மர்லினா மனுரங், ஆஃப்கனிஸ்தானைச் சேர்ந்த ஆர்ங் ரிம்பா, மற்றும் ஃபிலிபினோ ஆசிரியர் ரான்டே ஹலசன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பிரபல பிலிப்பீன்ஸ் அதிபர் ரமன் மகசேச, 1957-ஆம் ஆண்டு மறைந்தபின் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 mins ago
உலகம்
4 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago