துபாயில் பிரமாண்டமான இந்து கோயில் திறப்பு: சிறப்புகள் என்னென்ன?

By எல்லுச்சாமி கார்த்திக்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரமான துபாய் நகரில் இந்து கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை பக்தர்கள் தரிசக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் அரபு கட்டிடக் கலையை இணைத்து இந்தக் கோயில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.

துபாய் நகரின் ஜெபல் அலி கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அனைவரும் பார்வையிடும் வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. துபாய் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதீர் ஆகியோர் இணைந்து கோயிலின் தொடக்க விழாவில் பங்கேற்று இருந்தனர். இது சாத்தியமான நிலையில், அமீரகத்தில் வாழ்ந்து வரும் 35 லட்ச இந்தியர்களுக்கு உறுதுணையாக இயங்கி வரும் அமீரக அரசுக்கு இந்திய தூதரகம் நன்றியை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்தக் கோயில் இருப்பதாகவும். அதன் மூலம் இந்தத் தொடக்க விழாவில் வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து உள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அர்ச்சகர்கள் ‘ஓம் சாந்தி ஓம்’ என மந்திரம் சொல்ல, மேளதாளங்கள் முழங்க அமர்க்களமாக இந்த விழா நடந்துள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதி ‘வழிபாட்டு கிராமம்’ என அறியப்படுகிறது. இங்கு 7 தேவாலயங்கள், குருநானக் தர்பார் சீக்கிய குருத்வாரா மற்றும் இந்து கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்பு அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE