சீனாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு 12.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு 13200 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது.
பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் 12.2 சதவீதம் உயர்த்தி நிதி ஒதுக்கீட்டை 13200 கோடி டாலர்களாக (ரூ. 816558 கோடி) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என சீன பிரதமர் லீ கெகி யாங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கடந்த மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 2,24,000 கோடி பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்தது. அதன் பார்வையில் சீனாவின் ஒதுக்கீடு மிக மிக அதிகமாகும்.