இஸ்ரேல் மீது 200+ ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்

By செய்திப்பிரிவு

டெல் அவில்: இஸ்ரேலிலுள்ள ராணுவ இலக்குகளை நோக்கி 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு வீசியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஹிஸ்புல்லா என்பது இரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹிஸ்புல்லா என்ற பெயரின் பொருள் கடவுளின் கட்சி.

இந்நிலையில், இஸ்ரேலை நோக்கி 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதன் மூத்த தளபதி முகமது நிமா நாசர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தம் குறித்த தனது சமீபத்திய திட்டத்தை மத்தியஸ்தர்களுடன் பகிர்ந்து கொண்டதாக ஹமாஸ் கூறுகிறது. அதே வேளையில் இஸ்ரேல் இந்த வாய்ப்பை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், சில நாட்களுக்குப் பிறகு தெற்கு காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட நகரத்தின் கிழக்குப் பகுதிகளை விட்டு வெளியேற 250,000 மக்களுக்கு இஸ்ரேல் உத்தரவிட்டது. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,011 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87,445 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்