பதான்கோட் தாக்குதலில் தொடர்புள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் 2016 ஜனவரியில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் சியால் கோட் கமாண்டரான ஷாகித் லத்தீப்உள்ளிட்ட இருவர் கையாண்டது, வழிநடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் சியால்கோட் நகரில்உள்ள மசூதி ஒன்றில் ஷாகித் லத்தீப்அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஷாகித் லத்தீப் கடந்த 1996-ல் ஜம்முவில் போதைப் பொருள் மற்றும் தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த 2010-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.

பாகிஸ்தான் உடனான உறவைசீரமைக்கும் முயற்சியாக அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு லத்தீப் மற்றும் 24 தீவிரவாதிகளை விடுவித்தது.

1999-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்கடத்தப்பட்டபோது, 154 பயணிகளை மீட்பதற்காக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார் மற்றும் 2 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது ஷாகித் லத்தீப் உள்ளிட்ட 32 பேரையும் தீவிரவாதிகள் கோரினர். ஆனால் இவர்களை விடுவிக்க அப்போதைய வாஜ்பாய்அரசு மறுத்துவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE