இந்திய மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: இறக்குமதி கொள்கை ஆணை 2022-ன் கீழ், இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் கொள்முதல் செய்வதற்கு இனி எந்த தடையும் இல்லை.

அவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தடையில்லா சான்றுக்கு (என்ஓசி) விண்ணப்பிக்கலாம் என்று டிஆர்ஏபி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE