ஒரு ஊரில் ஒருவர் பலூன் விற்றுக்கொண்டிருந்தார். எல்லா நிறத்திலும் பலூன்கள் அவரிடம் இருந்தன. குழந்தைகள் பலூன்களை விரும்பி வாங்கி விளையாடினர். பலூன்காரரிடம் கருப்பு நிற பலூனும் இருந்தது. ஆனால், அதை யாருமே வாங்கவில்லை. மற்ற பலூன்களும் கருப்பு பலூனைப் பார்த்து கிண்டல் செய்தன . அந்தத் தெருவில் ஒரு பையன் இருந்தான். அவனுக்கும் பலூன் வாங்க ஆசை. ஆனால், அவனிடம் போதுமான காசு இல்லை. அவன் காசு சேர்த்து வந்து கருப்பு பலூனை வாங்கினான். கருப்பு பலூனுக்கு அவன் ஆதரவு தந்தான்.
சிறுகதை எழுதியவர் ஏழாம் வகுப்பு மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புட்குழி காஞ்சிபுரம் மாவட்டம்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ‘ரெட் பலூன்’ சிறார் திரைப்படம் கடந்த வாரம்திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்து ஊக்கம் பெற்று மாணவிஒருவர் எழுதிய சிறுகதை இது.