இரை தேடிச் சென்ற புறாக் கூட்டம் மாமரத்தின் பொந்துகளில் மாலையில் வந்தடையும். அடுத்த மரக்கிளைகளில் காகமும் வசித்து வந்தது. எப்போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். குஞ்சு புறாவுக்கு நீண்ட தூரம் பறக்க ஆசை. அதனால் இரை தேடி போனபோது பறந்து கொண்டே இருந்தது. நீண்ட தூரம் பறந்த களைப்பில் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றி முற்றி பார்த்தது எங்குமே தண்ணீருக்கான தடயமே இல்லை.
கொஞ்ச தூரத்தில் தண்ணீர் குடிக்கும் சத்தம் கேட்டு அருகே சென்றது. நீர் யானை தான் தண்ணீர் அருந்திக் கொண்டு இருந்தது. நல்லவேளை பிழைத்துக் கொண்டோம் என்று நீர் யானையிடம் நீரை பெற்று அருந்தியது. அப்பாடா... இப்ப தான் உயிர் வந்தது என்று நன்றி சொல்லியது. இருவரும் நண்பர்களாக பழகினர். தாயின் நினைவு வரவே நீர் யானையிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டது .
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்