ஓர் அறையில் யாழினி, தமிழினி, குயிலன் ஆகிய மூவரும் அமர்ந்திருந்தனர். யாழினியிடம் ஹார்மோனியம் இருந்தது. குயிலனின் கையில் குறிப்பேடும், பேனாவும் இருந்தன. தமிழினி ஒரு காட்சியைக் கூறினாள். அதனைக் கூர்ந்து கேட்ட சில நொடிகளுக்குப் பின்னர், யாழினி தனது ஹார்மோனியத்தில் ஓர் இசைக்கோவையை உருவாக்கினாள்.
குயிலன் அதனைக் கேட்டுக் கொண்டே தமிழினி கூறிய காட்சியை தனது மனக்கண்ணில் கற்பனை செய்தார். சில நிமிடங்கள் சிந்தித்தார். பின்னர், ஒரு பாடலை எழுதினார். யாழினி மீண்டும் தனது இசைக்கோவையை இசைத்தாள். அதனோடு சேர்ந்து மூவரும் குயிலனின் பாடலைப் பாடினர். இசைக்கோவையும் பாடலிலுள்ள சில சொற்களும் பொருந்தாமல் இருப்பதாய் யாழினிக்குத் தோன்றியது. அச்சொற்களைச் சுட்டிக்காட்டினாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்