டாக்டர் துவாரகநாத் சீனாவில் மருத்துவ சேவை புரிந்து வந்த காலத்தில் காயமுற்ற போர் வீரர்கள் பலரும், பொதுமக்களும் பிளேக் நோய் தாக்கி கொத்துக் கொத்தாக மடிந்தனர். அதற்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய துவாரகநாத், தமக்குத் தாமே பிளேக் தொற்றை ஏற்படுத்திக் கொண்டார். மக்களை காக்க தன்னையே அர்ப்பணித்த துவாரகநாத்தை சீன மக்கள், வாஞ்சையுடன் 'கே-ஹூவா' என்று சீன மொழியில் அழைத்தனர்.
மருந்து பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, அதீதக் குளிர் அனைத்தையும் தாண்டி, மருத்துவப் பணியில் கரைந்து போனார் துவாரகநாத். 1940-ம் ஆண்டில், 72 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் அறுவை சிகிச்சை செய்தும், தொடர்ந்து 13 நாட்கள் ஒரே இடத்தில் பணியாற்றியும், காயமுற்ற 800 வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்