தயங்காமல் கேளுங்கள் - 23: இந்த மிட்டாய் சாப்பிட்டால் இருமல், தும்மல் வராது!

By செய்திப்பிரிவு

இருமலும் தும்மலும் எந்த ஒரு ஒவ்வாத பொருளும் நம் உடலுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளும் நம் உடலின் தூய்மைப் பணி என்று கடந்த வாரம் பார்த்தோம். இப்போது மழைக்காலம் அல்லது குளிர்காலம் தொடங்கியவுடன் சிலருக்கு மட்டும் இருமல் ஏற்படுவது ஏன்?, அதை எப்படித் தவிர்ப்பது? என்ற வருணின் தாயாரது கேள்விக்கு வருவோம். பொதுவாக வானிலை வெப்பமாக அல்லது குளிராக இருந்தாலும், நமது மூச்சுக்காற்றின் வெப்பநிலை மற்றும் அதன் ஈரப்பதம் (temperature & humidity) அதற்கு தகுந்தாற்போல மாறுவதில்லை.

அது எப்போதும் சமநிலையில்தான் இருக்கிறது. இந்த சமநிலையை சீராக வைத்திருக்கும் வேலையைத்தான், நாம் ஏற்கெனவே பார்த்த நமது காப்லெட் செல்களும், நமது மூக்கைச் சுற்றியுள்ள சைனஸ்களும் (sinuses) பார்த்துக் கொள்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE