கதை கேளு கதை கேளு 16: இயங்குவதுதான் வாழ்க்கை

By செய்திப்பிரிவு

வருடங்கள் கடந்து வயது முதிர்வதால் அம்மாடி...அப்பாடி..... என்று உட்காரும் போதும் எழும்போதும் தாளம் இசைக்கிறார் தாத்தா. அவருக்கு இரு பேத்திகள். கதிர்ஒளி, கனல் மொழி. இருவரும் தாத்தாவிடம் வகுப்புக் கதைகளை பேசியும், வாக்கிங் செல்லும்போது கூட நடந்தும், சீட்டு விளையாடச் சொல்லித்தந்தும் அவரை நல்ல கூட்டாளியாக பாவிக்கிறார்கள். தாத்தா -பேத்திகள் உரையாடலில் தாத்தா அவ்வப்போது பல்பு வாங்குகிறார். சிலநேரத்தில் பேத்திகள் பாடம் கற்கிறார்கள். பல நேரங்களில் தாத்தா தன் தவறை சிந்திக்கிறார்.

பேத்திகளிடம் புதுப்பாடம்: கடைவீதியில் காசுவேண்டி கையேந்தும் பெண்ணிடம், கணக்கு பார்க்காம கொடு தாத்தா என்று புதுப்பாடம் கற்பிக் கிறார்கள். Ass சீட்டு விளையாட்டில் தாத்தாவை தோற்கடித்துவிட்டு, தாத்தா கழுதையாகிட்டாரு என்று பேத்திகள் தரும் பட்டத்தை, அரசு அதிகாரியாக இருந்தபோது பணிக்காலத்தில் எந்த விருதும் பெறாது ஓய்வு பெற்றுவிட்ட தாத்தா பெருமிதமாய் ஏற்றுக்கொள்கிறார். அதற்காகவே அடிக்கடி விளையாட்டில் கழுதையும் ஆகிறார். பேத்திகளின் அன்றாடச் செயல்களை உற்றுக் கவனிக்கிறார் தாத்தா, பள்ளிகள் செலுத்தும் அதிகாரத்தில் கனல்மொழி சிக்கவில்லை. ரேங்க் பற்றி கவலையில்லை I don't care என்கிறாள். அதிகாரத்தை எதிர்க்கும் சீற்றம் தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்குமே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE