கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இந்தியர்தான், இன்று மனிதர்கள் அனைவரும் நீண்டகாலம் வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கினார் என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை என்று 1950-ல் பிரபல வார இதழ் ஒன்றில் எழுதினார் அமெரிக்க எழுத்தாளர் டோரான் ஏண்ட்ரிம். அந்த இந்தியர், டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ்.
ஆந்திராவில் உள்ள பீமவரம் மாவட்டத்தில் 1895-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் தேதியன்று, ஜகன்னாதம் வெங்கம்மா தம்பதியினரின் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் சுப்பாராவ். தந்தை அரசுப் பணியில் இருந்தபோதும் ஏழு குழந்தைகளில் ஒருவர் என்பதால் வறுமையுடன் கழிந்தது சுப்பாராவின் பிள்ளைப்பிராயம். பள்ளிப் படிப்பை முடிக்கவே மூன்றுமுறை தடை, பழவியாபாரம் செய்தால் பணம் ஈட்டலாம் எனும் முயற்சி, சந்நியாசியாக வாழலாம் என ராமகிருஷ்ண மடத்தில் சேர பிரயத்தனம் என பற்பல இடையூறுகளைக் கடந்த பிறகே உயர்கல்வி பயிலச்சென்றார் சுப்பாராவ்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்