கதைக்குறள் 13: நம்மை வாழ வைக்கும் தெய்வம்

By செய்திப்பிரிவு

ஆகாஷ் குழாயில் இருந்து வழியும் நீரைப் பிடித்து ஆனந்தமாய் விளையாடிக் கொண்டு இருந்தான். வீட்டின் உள்ளே இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது. தண்ணீரை வீணாக்காதே. மழை பெய்து கொண்டு இருக்கிறது. வாளியில் தண்ணீர் பிடித்து வை என்றாள். சரி அம்மா என்று தண்ணீர் பிடிக்க ஓடினான். ஆஹா மழையில் நனைவது எவ்வளவு சுகமாக இருக்கு. இதில் கப்பல் செய்து விளையாடலாம் என்று தோன்றியது. உடனே வீட்டிற்குள் நுழைந்து காகிதக் கப்பல் செய்து மழையில் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அம்மா அதட்டலாக நான் சொன்ன வேலை செய்யாமல் என்ன செய்கிறாய் என்றவுடன் நினைவுக்கு வந்தவனாய் வேகமாக ஓடி மழை நீரைப் பிடித்து வந்தான். அம்மா அம்மா எனக்கு ஒரு சந்தேகம். இந்த மழை நீர் எப்படி அம்மா வருது என்றான். ஓ. அதுவா? கடல் நீர் ஆவியாகி மேகம் குளிர்ந்து மழை நீர் வானத்தில் இருந்து கொட்டுது. அந்த தண்ணீர் தான் மக்களுக்கு அமிழ்தமாக இருக்கு. சுத்தமான தண்ணீராகவும் இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE