வாழ்ந்து பார்! - 14: உறவில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

By செய்திப்பிரிவு

நெருங்கிய உறவிலோ, நட்பிலோ விரிசல் விழாதா என்று சாமுவேலின் வினாவை மீண்டும் வினவி வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர் எழில். விரிசல் விழும் என்றாள் நன்மொழி. அப்படியா என்று குழப்பமாய்ப் பார்த்தான் சுடர். ஆம். நேற்று என் தம்பியோடு சண்டை. இப்போது வரை அவனோடு நான் பேசவில்லை. அது உறவு விரிசல்தானே என்றாள் நன்மொழி. இது விரிசல் இல்லை; பிணக்கு என்றார் எழில். அப்படியானால் உறவு விரிசல் என்றால் என்ன என்று வினவினான் அழகன்.

அல்லியும் தாமரையும் நெடுங்காலமாக நெருங்கிய நண்பர்கள். பலநேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு இருவரும் வாழ்க்கையில் முன்னேறியவர்கள். அவர்கள் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கைதான் அவர்களது நட்புக்கு அடிப்படை. அதனால் தனது எல்லாச் செயல்களையும் அல்லி ஆதரிப்பாள் என்று தாமரை நினைத்தாள். எனவே,அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கொண்ட வணிகத்தில் அல்லியைக் கேட்காமலேயே தாமரை பல முடிவுகளை எடுத்தாள். அம்முடிவுகளால் வெற்றி கிடைத்த பொழுது அவ்வெற்றிக்குத் தானே காரணம் என்றாள். தோல்விக்கு இருவரும் பொறுப்பு என்றாள். இதனால் அல்லியின் மனத்தில் தாமரையின் மீதிருந்த நம்பிக்கை (trust) படிப்படியாக குறையத் தொடங்கியது. தாமரையின்முடிவுகளை மென்மையாக அல்லி மறுத்துரைக்கத் தொடங்கினாள். வழக்கத்திற்கு மாறான அல்லியின் இந்த எதிர்வினை தாமரைக்கு எரிச்சலாக இருந்தது. அவள், அல்லி சொல்வதைக் கேட்பதில்லை. அதன் விளைவாக, அவர்கள் இருவரும் ஓராண்டாக நேரடியாகப் பேசிக்கொள்வதில்லை. இக்கதையில் அல்லிக்கும் தாமரைக்கும் இடையே ஏற்பட்டிருப்பது பிணக்கா, விரிசலா என்று வினவினார் எழில். “விரிசல்” என்றாள் மதி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE