மலையடிவாரத்தில் கோழி குப்பையைக் கிளறிக் கொண்டு இருந்தது. அந்த வழியாக பறந்து வந்த கழுகு ஒன்று கோழியைப் பார்த்து என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு கோழி இரை தேடிக் கொண்டு இருக்கிறேன் என்றது. என்னுடன் வா இரை தருகிறேன் என்று கழுகு அழைத்தது. கோழிக்குஞ்சு கழுகிடம், எங்க அம்மா யார் கூப்பிட்டாலும் போகக்கூடாது என்று சொல்லி இருக்காங்க. நாளை அம்மாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்றது. கழுகும் சரி என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.
அதற்குள் அம்மாவும் கோழிக் குஞ்சுவை தேடி வந்தது. அம்மா அம்மா இன்னைக்கு ஒரு நண்பனைப் பார்த்தேன். அவர் எனக்கு இரை தேடிக் தருகிறேன் என்னுடன் வா என்றார். நான் அம்மாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்றேன் என்று சொல்லியது. அதைக் கேட்ட அம்மாவும் கோழிக்குஞ்சுவிடம் அந்த அண்ணா எப்படி இருந்தார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு கழுகு பொல்லாதது, நீ அந்த இடத்திற்கு போகாதே என்று சொல்லியது. மறுநாள் கோழிக்குஞ்சு வருகைக்காக மலையடி வாரத்தில் கழுகு காத்திருந்து ஏமாந்து திரும்பியது. கோழிக்குஞ்சுக்கு கழுகு அண்ணாவைப் பார்க்கும் ஆசையில் தன் நண்பர்களை மலையடி வாரத்திற்கு அழைத்தது. வரலை நீ போ என்று சொன்னார்கள். உங்களுக்கு சாக்லேட் தருவார்கள் என்று சொன்னதும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சென்றார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago