வாழ்ந்து பார்! - 13: நட்பு மலர்வது எப்போது?

By செய்திப்பிரிவு

யாரெல்லாம் உறவினர் ஆவார்கள் என்பது குறித்து மாணவர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்தை ஆமோதித்தார் ஆசிரியர் எழில். நீங்கள் அனைவரும் சரியாகப் புரிந்துகொண்டு பேசுகிறீர்கள் என்று எழில் பாராட்டியதும் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

எல்லாரும் உறவினர்கள் என்றால், பின்னர் ஏன் சிலரை மட்டும் உறவினர் என்கின்றனர் பெரியோர் என்று வினவினாள் கயல்விழி. அவர்கள் உறவினர் என்று கூறுவது குடும்ப உறவினர்களை மட்டுமே என்றாள் மணிமேகலை. நாம் பிறக்கும்போதே இருக்கும் இந்த உறவினர்கள் நமது உடலைவளர்க்கிறார்கள்; உள்ளத்தைப் பண்படுத்துகிறார்கள் என்றாள் இளவேனில். ஆம். அவர்கள் உறவு – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - நெடுங்காலம் நீடிக்கக் கூடியவை என்றாள் மதி. அப்படியானால் குறுகியகால உறவுகள் உள்ளனவா என்று வினவினாள் நன்மொழி. உள்ளன. வீட்டிற்கும் பள்ளிக்கும் வெளியில் காணும் பல உறவுகள் குறுகியகால உறவுகள்தானே என்றுவிடையளித்தான் தேவநேயன். பள்ளியிலும், நமது வீட்டிற்கு அருகிலும் ஏற்படும் உறவுகள்கூட நம்மில் யாராவது ஒருவர் இடம்பெயரும் பொழுது முடிவடைய வாய்ப்பிருக்கிறது. அவையும் குறுகியகால உறவுகளாகக் கருதப்படுகின்றன என்று விளக்கினான் அழகர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE