மகத்தான மருத்துவர்கள் - 12: காந்தி கிராமத்திற்காக வாழ்நாளை அர்பணித்த மருத்துவர்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் எனும் இடத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம் அமைத்தார் டாக்டர் டி.எஸ்.செளந்திரம். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் கூடாக அது உருவெடுத்தது. தேவதாசி முறையில் இருந்து தப்பித்து வெளியேறிய பெண்களுக்கான பிரத்யேக இல்லமாகவும் மாறியது. அவர்களுக்கு கல்வியையும், தொழிலையும் அமைத்து உதவியது என்பதை கடந்த செவ்வாய்க்கிழமை பார்த்தோம். அவரைப் பற்றி கூடுதலாக தற்போது பார்க்கலாம்.

டாக்டர் டி.எஸ்.செளந்திரத்தின் வாழ்வில் நிகழ்ந்த துன்பத்தின் நினைவாகவோ என்னவோ, பெண்களின் திருமண வயதை பதினெட்டாக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்ற முன் நின்றார் டாக்டர் சவுந்திரம். தொடர்ந்து 1962-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் கல்வித் துறையின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்று, இலவச ஆரம்பக் கல்வியை நாடெங்கும் கொண்டுவர வழிவகுத்தார் டாக்டர் சவுந்திரம். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தபோதும் எப்போதும் கதராடை மட்டுமே உடுத்தி எளிமையின் உருவமாகத் திகழ்ந்த டாக்டர் சவுந்திரம், தனது பையில் 3 உடைகள் வைத்திருப்பாராம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE