கதை கேளு கதை கேளு 12: சமத்துவம் பேசும் மந்தாகினி

By செய்திப்பிரிவு

என்ன பெயர் இது ? என்று தானே பார்க்கறீங்க. அதற்குத்தான் குழந்தையை ஐந்து வயதில் பள்ளி சேர்க்கும் முன், உன் பெயர் பிடித்திருக்கிறதா? என்று கேட்டு, குழந்தைக்கு பிடித்த பெயருடன் பள்ளியில் சேர்த்துவிடுங்களேன் என்கிறாள் மந்தாகினி. மண்டாகினி என்று ஆங்கில ஆசிரியர் அழைக்கும்போதும், மண்டூ என்று பெயரைச் சுருக்கி அண்ணன்கள் அழைக்கும்போதும் மந்தாகினி கோபத்தின் உச்சத்தில் இருப்பாள். மந்தாகினிக்கு அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் மேல் சில மாற்றுக்கருத்துகள் உண்டு.

மந்தாகினிக்கு புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும். அலமாரியில் அடுக்கியிருக்கும் புத்தகங்களில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து திண்ணையில் உட்கார்ந்து படிக்கத் தொடங்குவாள். உடனேயே அவளுடைய மாமா, "இந்த வயதில் எதற்குகதைப்புத்தகம் வாசிக்கிறாய்? பாடப்புத்தகம்வாசித்தால் போதும்" என்பார். திண்ணையில் அமர்ந்து புத்தகம் படிப்பதற்கு அம்மாவிடம் பயங்கர எதிர்ப்பு. அண்ணன்களும் அப்பாவும் மட்டும் நாளெல்லாம் திண்ணையில் உட்காரலாமாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE