மலை போல செல்வம் செல்லக்கண்ணுக்கு இருந்தது. அதனால் நண்பர்கள் கூட்டம் அவனைச் சுற்றி இருந்தார்கள். நந்தன் மட்டும் நெருங்கிய நண்பன். அடிக்கடி தன் பிள்ளைகள் படிப்பு செலவிற்காக பணம் வாங்குவான். செல்லக்கண்ணு யார் வந்து உதவி கேட்டாலும் மறுக்காமல் அள்ளி வழங்குவான். பெரிய படிப்பு இல்லாவிட்டாலும் பெரிய மனசு அவனுக்கு என்று ஊரே புகழாரம் சூட்டியது.
திடீரென்று ஒருநாள் செல்லக்கண்ணு தங்கை அண்ணா என் கணவர் வியாபாரத்தில் பணத்தை இழந்துவிட்டதாக கண்ணீர்விட்டாள். செல்லக்கண்ணும் மனம் இரங்கி சொத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்தான். மனைவியோ இப்படி எல்லாருக்கும் அள்ளி வழங்கிவிட்டு நம்ம பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்காமல் விட்டுவிடப் போறீங்க என்று வருத்தபடுவாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்