ரகுவரன் வீட்டு அருகில் உள்ள குளத்தில் வாத்துக் கூட்டத்தைப் பார்த்து ரசிப்பான். ஒரு நாள் ‘‘நானும் உங்களோடு நீந்தவா?” என்று பப்ளி வாத்திடம் கேட்டான். ‘‘வா” என்றது. ஆனந்தமாக நீந்தி விளையாடினான். இதைக் கண்ட முகிலன் தானும் வாத்தோடு விளையாட வருகிறேன் என்றான். அதற்கு ரகுவரன், ‘‘உனக்கு நீந்த தெரியாதே” என்றான். இதனால் கோபம் கொண்ட முகிலன் வாத்துக்கு சொந்தக்காரர்களிடம் ரகுவரன் வாத்தை திருடியதாய் பொய் சொல்லி விட்டான். அவரும் கண்டித்ததால் வருந்தினான் ரகுவரன்.
மறுநாள் மாலை பப்ளி வாத்து ரகுவரனை விளையாட அழைத்தது. ரகுவரனும் சம்மதித்தான். இதைக் கண்டு பொறுக்காத முகிலன், “வாத்துக்கு சொந்தக்காரர் இன்று இரவு உன்னை இங்கேயே கட்டி போட்டு விடுவார்” என மிரட்டினான். ரகுவரன் அதைக் கண்டு கொள்ளவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்