மாறட்டும் கல்விமுறை: 29 - ‘நானே செய்கிறேன், நானே செய்கிறேன்’ என்று கெஞ்சும் குழந்தை!

By ஜி. ராஜேந்திரன் 

பெரியவர்களைப் பார்த்து அதுபோலச் செய்து செய்துதான் குழந்தைகள் கற்கிறார்கள் என்று நம்மில் பலர் நம்புகிறோம். அதனாலேயே எல்லாவற்றையும் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இதனால் எந்நேரமும் குழந்தைகளிடம் விளக்கு விளக்கு என்று விளக்குகிறார்கள். பெரியவர்கள் சொல்படி செய்யும் குழந்தை நல்ல குழந்தை என்று வேறு பட்டம் கொடுக்கிறோம்.

புதியதொன்றைத் தெரிந்துகொண்டால், முன்பு தெரிந்தவற்றோடு ஒப்பிட்டு, இரண்டையும் இணைத்தோ, சிறிய மாற்றங்கள் செய்தோ புதியதை படைப்பது என்பது குழந்தைகளின் இயல்பு. பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைத்த குழந்தை நாற்காலியைத் தலைகீழாகத் தள்ளிவிட்டு, அதைத் தள்ளிக்கொண்டே, பேருந்து ஓட்டுநர் போல் நடித்துக் காட்டுவதும் இடையிடையே ஒலிப்பானை அழுத்தி ஒலியெழுப்புவதும் இந்த இயல்பின் வெளிப்பாடே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE