தயங்காமல் கேளுங்கள் - 55:: காய்ச்சல் என்பது வியாதி அல்ல

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

தன் மகன் நவீனுக்கு குளிர் காய்ச்சல் வந்தது ஏன் என்கிற கேள்வியை அவரது தாயார் நம்மிடம் எழுப்பி இருந்தார். எப்போதெல்லாம் உடலின் வெப்பநிலை மாறுபடுகிறதோ, அப்போதெல்லாம் நமது உடலில் இயற்கையாக செயல்படக் கூடிய தெர்மாமீட்டர் தான், மற்ற உறுப்புகளை இயக்கியும் முடக்கியும் உடலின் வெப்பநிலையை சீராக்க முயல்கிறது. அப்போது வெளித்தெரியும் ஓர் அறிகுறிதான் காய்ச்சல் மற்றும் குளிர். ஆக, காய்ச்சல் என்பது ஒரு வியாதி அல்ல.

அது ஒரு அறிகுறி மட்டுமே. நோயின் காரணமாகவும் மற்ற தருணங்களிலும் இது வெளிப்படலாம் என்றாலும், பொதுவாக கிருமித்தொற்று தான் காய்ச்சலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. காய்ச்சலை தடுக்க முடியுமா என்றால், காய்ச்சல் என்பது நோயல்ல. நோயின் அறிகுறி என்பதால், அது வராமல் தடுக்க முடியாது. ஆனால், அது வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை தவிர்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE