மலைச்சரிவில் உள்ள தேயிலைத் தோட் டத்தில் நாள்தோறும் மணிக்கணக்காய் உழைத்து தேய்ந்த மணிமேகலை தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தார். தேயிலை தோட்ட முதலாளி வீட்டு பிள்ளைகள் தங்க சங்கிலி, மோதிரம் போட்டு மிடுக்காக வருவதைப் பார்த்து தாய் மணிமேகலைக்குள்ளும் ஒரு ஆசை உண்டானது.
தம் பிள்ளைக்கும் தங்க மோதிரம் போட்டு அழகு பார்க்க வேண்டும். அதற்காக ஆசைஆசையாக பணத்தை சேமிக்கத் தொடங்கினார். தங்க மோதிரம் ஒன்றை வாங்கினார். வீட்டிற்கு வந்த உடன் மகனுக்கு பரிசளிக்க பையை திறந்து பார்த்தார். மோதிரத்தை காணவில்லை. அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார். ஏழைக்கு கனவு நனவாகாதோ என்று வருத்தப்பட்டார். பிள்ளைகளோ அம்மாவை தேற்றினார்கள். அந்த சமயம் யாரோ வந்து கதவை தட்டினார்கள். பரட்டை தலையும் கிழிந்த புடவையும் பார்ப்பதற்கே மிகவும் அழுக்காக இருந்தாள் வந்து நின்ற பெண்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்