உலக சாக்லேட் நாள் கொண்டாட்டம்: சாக்லேட் உடையணிந்து வந்த குழந்தைகள்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளியில் உலக சாக்லேட் தின கொண்டாட்டத்தின் போது பள்ளிக் குழந்தைகள் சாக்லேட் உடையணிந்து வந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளியில் சாக்லேட் நாள் கொண்டாட்டப்பட்டது. பள்ளியின் முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். சாக்லேட் உடையணிந்து வந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன்தலைமை வகித்து பேசும்போது, "குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் சாக்லெட்டும் ஒன்று.

சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சிமற்றும் குதூகலத்தின் அடையாளம்” என்றார். அதேநேரத்தில் குழந்தைகள் அளவோடு சாக்லேட்டை உண்பது நல்லது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE