10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: 10-ம் வகுப்பு துணை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகளை 23-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வரும் 25, 26-ம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணத்தை (ஒரு பாடத்துக்கு ரூ.205) செலுத்தி விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் முடிவு வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE