தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஆனால், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நீர் வளம் சிறப்பாக இருக்கிறது. வடமேற்குப் பகுதியில் ‘கலஹரி’ பாலைவனம் இருக்கிறது. வட கிழக்கில் உள்ள க்ருகர் தேசியப் பூங்கா, சுமார் 20000 கி.மீ. பரப்பளவுக்கு விரிந்து கிடக்கிறது. நீண்ட கடற்கரைக்கு இணையாக கேப் ஃபோல்ட் மலைத் தொடர் இருக்கிறது.
இதனை ஒட்டியுள்ள நிலம், பாலை போன்று வறண்டு உள்ளது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், ஆண்டு முழுவதும் நல்ல மழைப் பொழிவு கிடைக்கிறது. இங்கு, ‘தோட்டப் பாதை’ (‘கார்டன் ரூட்’) என்று அழைக்கப்படும் வனப்பகுதி அமைந்துள்ளது. தென்மேற்கு எல்லையில், அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி, கேப் தீபகற்பம், வளமாக இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்