ஆடி மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் நிகழ்வு அம்மன் கோயில் கூழ் ஊற்றுதல். கேழ்வரகில் செய்யும் கூழ் உடலுக்கு ஆரோக்கியமானது. கேழ்வரகை ராகி என்றும் அழைப்பார்கள். ராகியைக் குறித்த புராணக் கதையைப் தெரிந்து கொள்வோமா? பதினான்கு வருட வனவாசம் முடிந்த பிறகு, ராமர் அயோத்திக்கு வந்தார். அப்போது ராமனின் வருகையை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.
அனுமன் கிஷ்கிந்தைக்குச் செல்ல விரும்பினார். அதற்கு முன்பாக கொஞ்சம் ராகியை எடுத்துக் கொண்டு செல்ல நினைத்தார். உடனே அரிசிக்கு கோவம் வந்துவிட்டது. அரிசியாகிய நானே உயர்ந்தவன். சிறந்தவன். கடவுளுக்குப் படைக்கக்கூடிய தகுதி கொண்டவன். உயரிய என்னைத் தேர்தெடுக்காமல் ராகியைத் தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அனுமனிடம் சண்டைக்கு வந்தது அரிசி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்