சென்னை - கேதார்நாத்துக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத்துக்கு சிறப்பு விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சுற்றுலா சிறப்பு ரயில்கள், விமானங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷுக்கு சிறப்பு விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து ஜூன் 28-ம் தேதி சிறப்பு விமானம் புறப்படுகிறது.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய ஊர்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதுபோல, திருச்சியில் இருந்து ஜூன் 16-ம் தேதி விமானம் புறப்பட்டு, கயா, காசி, அலகாபாத் மற்றும் அயோத்தியாவுக்கு செல்ல உள்ளது. விவரங்களுக்கு 9003140682, 9003140680 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE