திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடி பேருந்து

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு நேரடியாக பேருந்து இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் திண்டுக்கல் வந்து அங்கிருந்து பேருந்தில் கொடைக்கானல் செல்லும் பயணிகள் அதிக அளவில் உள்ளனர்.

அவர்களின் வசதிக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு நேரடியாக பேருந்து இயக்க அரசு போக்கு வரத்துக் கழகம் ஏற்பாடு செய் துள்ளது. அதன்படி, தினமும் காலை 4 மணி, 5.15 மணி, 6.45 மணி மற்றும் 7.30 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் செல்ல ரயில் நிலையத்திலிருந்து ரூ.95 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் டேனியல் சாலமன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE