குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து

By செய்திப்பிரிவு

குன்னூர்: கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் (ஜன. 10, 11) ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குன்னூரில் 40 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. கனமழை காரணமாக குன்னூரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே அமைந்துள்ள ரயில்தண்டவாளத்தில் நேற்று காலைஅடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால், மலை ரயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயில், ஹில்குரோவ் பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றிய பிறகு, 2 மணி நேரம் தாமதமாக குன்னூரை மலை ரயில் சென்றடைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கனமழை காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேஇன்றும், நாளையும் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

22 days ago

சுற்றுலா

23 days ago

சுற்றுலா

26 days ago

சுற்றுலா

26 days ago

சுற்றுலா

27 days ago

சுற்றுலா

27 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்