செம்மொழிப் பூங்கா மலர்க்காட்சி இன்றுடன் நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் கடந்த 3-ம் தேதி மலர்க்காட்சி தொடங்கியது. இதில், 2.5 லட்சம் கொய் மலர்களும், 250 கிலோ உதிரிப்பூக்களும் பயன்படுத்தப்பட்டு, யானை, பாரம்பரிய மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதை, கடந்த 2 தினங்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மலர்க்காட்சியை பார்வையிட்டுச் சென்றுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர். இன்று மாலையுடன் மலர்க்காட்சி நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE