தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.352 கோடி :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையில், தொகுதியில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து செயல்படுத்தும் வகையில் ஒதுக்கப்படும் இந்தநிதியை விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த டிச.2-ம் தேதி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், 2021-22 ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் 50 சதவீதம் என்ற அடிப்படையில் ரூ.352.50 கோடியை விடுவித்துதமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE