புதிதாக 627 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று 365 ஆண்கள், 262 பெண்கள் என புதிதாக 627 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 687 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 7,476 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 12 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,656 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE