தமிழகத்தில் புதிதாக 1,578 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் புதிதாக 1,578 பேருக்குகரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள்904, பெண்கள் 674 என மொத்தம்1,578 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 188, கோவையில் 163, செங்கல்பட்டில் 107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 66,964 ஆக திகரித்துள்ளது. இதுவரை 26 லட்சத்து 14,291 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,2607 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 17,046 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,627ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,490 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE