பெரம்பலூரில் ஆயுதப் படை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் ஹரிஹரன்(43). அந்த அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்கக் கோரி அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, அந்தப் பெண் காவலருக்கு ஹரிஹரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காவலர், எஸ்பி மணியிடம் புகார் அளித்தார். எஸ்பி மணி விசாரணை செய்து அளித்த அறிக்கையின்படி ஹரிஹரனை திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago