சிவகங்கை மாவட்டத்தில்161 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவைஆட்சியர் தகவல் :

சிவகங்கை மாவட்டத்தில் 1679 வாக்குச்சாவடி மையங்கள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. தற்போது கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு கூடுதலாக 331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் காரைக்குடி தொகுதியில் 44 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூரில் 31 வாக்குச்சாவடிகள், சிவகங்கையில் 29, மானாமதுரை (தனி) தொகுதியில் 57 என மொத்தம் 161 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. மேற்கண்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நாளின்போது வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். மேலும் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்